சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளியம்பட்டி பகுதியில் பிரகாஷ்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சிறுமி கர்ப்பமானார். இந்நிலையில் பிரசவத்திற்காக சிறுமி சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு 15 வயது தான் ஆகிறது என்பது உறுதியானது.
இதுகுறித்து டாக்டர்கள் சேலம் குழந்தை திருமணம் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் பிரகாஷ் ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.