கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஓசூரில் தற்காலிக அன்னதான கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வெங்கடேசன் தலைமையில் அதிகாரிகள் இரண்டு ஆய்வு குழுக்களாக பிரிந்து ஆய்வு நடத்தினர்.

இதனையடுத்து 54 அன்னதான கூடங்கள், நீர்மோர் பந்தல்களில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த குடிநீர், சமையல் எண்ணெய், ஏனைய உணவு பொருட்களில் இருந்து மாதிரிகளை எடுத்து அரசு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து தரமான உணவு பொருட்களை வைத்து சமைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.