மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் சின்னகாளை என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சின்னகாளை தவுட்டு சந்தை வழியாக பெரியார் நோக்கி செல்லும் அரசு பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் பேருந்தை பின் தொடர்ந்து வந்த வாலிபர் திடீரென பேருந்தை வழிமறித்தார்.

இதனையடுத்து சின்னகாளையுடன் வாக்குவாதம் செய்து, ஒரு கட்டத்தில் பேருந்திற்குள் ஏறி டிரைவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து சின்னகாளை தெற்கு வாசல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தங்க பெருமாள் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.