பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீழ மாத்தூர் கிராமத்தில் பாண்டுரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளையபெருமாள்(24) என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இளையபெருமாள் தனது பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டதாக தெரிகிறது. அப்போது அண்ணனுக்கு முதலில் திருமணம் செய்து வைத்துவிட்டு, உனக்கு திருமணம் செய்து வைக்கிறோம் என பெற்றோர் தெரிவித்தனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த இளையபெருமாள் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளையபெருமானின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.