விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அகலூர் கிராமத்தில் பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமமூர்த்தி என்ற மகன் இருக்கிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு ராமமூர்த்தி பாட்டி வீட்டிற்கு வந்த 6- ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து செல்போனில் தவறான படங்களை காண்பித்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி தரப்பில் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் ராமமூர்த்தியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ராமமூர்த்திக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.