விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி தெற்கு தெருவில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பிரபு சர்க்கரையை நோயால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலையில் இருந்த பிரபு தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரபுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.