ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூமாண்ட கவுண்டனூரில் விவசாய மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பூரணியும் சின்னியம்பாளத்தைச் சேர்ந்த மதன்குமார்(29) என்பவர் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் பெங்களூரில் தங்கியிருந்து தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பூரணிக்கு பெண் குழந்தை பிறந்தது.

கடந்த 10- ஆம் தேதி குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்தபோது பூரணி திடீரென மயங்கி விழுந்தார். இதனால் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மதன்குமார் தனது மனைவி மயங்கி கிடப்பதை கண்ட அதிர்ச்சியடைந்தார். உடனடியாக பூரணியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு பூரணியை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பூரணி இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.