கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மாநகராட்சி அன்னை நகர் பகுதியில் சகாய பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் டேட் ரன் பார்த்திபன் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த பெற்றோர் பார்த்திபனை கண்டித்தனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்து பார்த்திபன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்திபனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.