தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று அக்டோபர் 14ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் ஊருக்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த முகாமில் ஐந்தாம் வகுப்பு முதல் டிகிரி மற்றும் டிப்ளமோ என அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம். மேலும் இந்த முகாமில் பங்கேற்க வருபவர்கள் https://bitly/svgjobfair1 என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் முகாமில் திறன் பயிற்சி மற்றும் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி, வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவி தொகை விண்ணப்பங்கள் ஆகியவை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.