காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேனம்பாக்கம் பகுதியில் ஆனந்தன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் நத்தப்பேட்டை பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் ஆற்பாக்கம் பகுதியில் ஒரு லாரி பழுதாகி நின்றது. அதனை பழுது பார்க்க ஆனந்தன் தன்னுடன் வேலை பார்க்கும் சதீஷ் என்பவரை அழைத்துக் கொண்டு அங்கு சென்றார். மீண்டும் அவர்கள் காஞ்சிபுரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது மூர்த்தி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் ஆனந்தனின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆனந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சதீஷ், மூர்த்தி ஆகியோர் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூர்த்தி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.