வேலூர் மாவட்டத்தில் உள்ள செதுவாலையில் அனில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்தப் பகுதியில் ஷு கம்பெனி நடத்தி வந்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு மர்ம நபர் அனில் குமார் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குடியாத்தம் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கினை விசாரித்த வேலூர் மாதேஸ்வரன் நீதிமன்றம் யுவராஜுக்கு இரண்டு ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 1000 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.