விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நந்தனார் தெரு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் இருக்கும் பெட்டிக்கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் கடை உரிமையாளரான கல்யாணி என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.