கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரக்கண்டநல்லூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த புண்ணியமூர்த்தி, கோபால், சுரேஷ், செல்வம் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து ஜாமீனில் வெளியே வந்த சுரேஷ் அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு சென்று தனது மோட்டார் சைக்கிளை விடுவிக்குமாறு கேட்டார். அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த சுரேஷ் போலீசாரை கண்டித்து தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் காப்பாற்றி விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.