கரூர் மாவட்டத்தில் உள்ள என்.புதூர் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அய்யம்பாளையத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைக்கு சென்ற மது வங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு புறப்பட்டார். அப்போது திடீரென வந்த 4 வாலிபர்கள் குப்புசாமியிடம் உங்கள் மீது சந்தேகமாக இருக்கிறது. லைசன்ஸ், ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸ் ஆகியவற்றை காட்டுங்கள் என கூறியுள்ளனர். அதற்கு குப்புசாமி தன்னிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை என கூறியுள்ளார். இதனால் 4 பேரும் குப்புசாமியின் இரு சக்கர வாகனத்தை பறித்து கொண்டு காவல் நிலையத்திற்கு வருமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். இதுகுறித்து குப்புசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சுதாகர், ஜெகதீஷ், முருகன், சக்திவேல் ஆகிய நான்கு பேரும் இரு சக்கர வாகனத்தை பறித்தது தெரியவந்தது. இதில் சக்திவேல் கோவையில் இருக்கும் ஆயுதப்படையில் காவலராக வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். நான்கு பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏமாற்றி இரு சக்கர வாகனத்தை பறித்த வாலிபர்கள்…. காவலர் உட்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“பள்ளியை மூடக்கூடாது” மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்…!!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் 1990ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளியில் போதுமான நிதி இல்லை…
Read more“சிறுமிக்கு பாலியல் தொல்லை”…. மதபோதகர் போக்சோவில் கைது…. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராயல் டவுன் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் மே வால்ட் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திகிரி பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் மத போதகராக இருக்கிறார். இந்த பகுதியில் நேபால் நாட்டைச்…
Read more