ஈரோடு மாவட்டத்திலுள்ள முடுக்கன்துறை பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் புளியம்பட்டியில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் உடைந்த குடிநீர் குழாயை சரி செய்து குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பிறகு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.