திருச்சி மாவட்டத்திற்கு டிசம்பர் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தேதியில் திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.