ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது. தாழ்வான பகுதி மற்றும் நீர் நிலைகளின் கரையோரம் தங்கி இருப்பவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு தற்காலிகமாக மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

தொடர் மழை காரணமாக நெமிலி கிராமத்தில் சிறு வளையம் பகுதியில் 50 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனையடுத்து பனப்பாக்கம்-பன்னியூர் செல்லும் தரை பாலம் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்படுகின்றனர்.