கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோமுகி ஆற்று பாலப் பகுதியில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த ராகவன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவரது நண்பர்களான சுரேஷ்குமார், பவின் குமார், தமிழ் ஆகிய மூன்று பேரும் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் உயிரிழந்தார். பவின் குமார் மற்றும் தமிழுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.