ஈரோடு மாவட்டத்திலுள்ள குடிச்சி டாஸ்மாக் கடை பவானிசாகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் போலீசார் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் புதூர் பகுதியைச் சேர்ந்த கிட்டுசாமி, பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கிட்டுசாமி, தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.