கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் நகராட்சி பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புகழூர் நகராட்சி 19-ஆவது வார்டுக்கு உட்பட்ட வள்ளுவர் நகர் தெற்கு பகுதியில் இருக்கும் சில இடங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை புகழூர் நகர மன்ற தலைவர் சேகர் நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி முடிக்க வலியுறுத்தியுள்ளார். இந்த ஆய்வின்போது நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.