கரூர் மாவட்டத்தில் உள்ள பாலதுறை சுடுகாடு பகுதியில் சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட சிலர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.

அவர்களை போலீசார் சுற்றி விளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஜெயந்திரன், சபரிநாதன், கவியரசன், கோபிநாத், கண்ணன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஐந்து பேரையும் கைது செய்தனர். மேலும் சண்டையில் ஈடுபட்ட சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.