ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு கிளை பஜார் பகுதியில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருக்கும் நவகிரகங்கள், விநாயகர் சன்னதி, துர்க்கை அம்மன் ஆகியவை புதுப்பிக்கப்பட்டது. இன்று காலை 9 மணிக்கு கோவில் கோபுரத்தில் இருக்கும் கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது.

இதனையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த விழாவில் இந்து சமய அறநிலை துறை மாவட்ட தலைவர் லட்சுமணன், மகாத்மா காந்தி முதியோர் காப்பக துணை தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.