சென்னை மாவட்டத்தில் உள்ள சோழவரம் பகுதியில் வசிக்கும் சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3 மாதமாக சிறுமி பள்ளிக்கு சென்று வரும் போதெல்லாம் வழுதிகை மேடு, ஞாயிறு கிராமத்தில் வசிக்கும் பாபு என்பவர் சிறுமிக்கு தொந்தரவு அளித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பாபு சிறுமியை மோட்டார் சைக்கிளில் அமர வைத்து பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் தெரிகிறது. இது குறித்து சிறுமியின் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் பாபுவை கைது செய்தனர்.