தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு அண்ணா நகரில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சத்தியமூர்த்தி கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சத்தியமூர்த்தி தனது நண்பர்களான செல்வம், விக்னேஷ் குமார், சேகர், உள்ளிட்டோருடன் அண்ணா நகர் பின்புறம் இருக்கும் பகுதியில் மது குடித்துள்ளார். அப்போது மது காலியாகிவிட்டதால் மீண்டும் வாங்கி தருமாறு செல்வம் சத்தியமூர்த்தியிடம் கேட்டுள்ளார்.

அதற்கு சத்தியமூர்த்தி மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த செல்வம் கத்தியால் சத்தியமூர்த்தியை குத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற நண்பர்கள் உடனடியாக சத்தியமூர்த்தியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்வத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.