கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கடைவீதி போலீசார் உக்கடம்- பேரூர் பைபாஸ் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கரும்பு கடை சேரன் நகரை சேர்ந்த அக்பர் அலி, ரியாஸ்கான் என்பது தெரியவந்தது.

அவர்களிடம் 73 போதை மாத்திரைகள் இருந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனம், 1400 ரூபாய் பணம், போதை மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.