கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்த போது கடந்த 2 ஆண்டுகளாக சிறுமியும் 17 வயது சிறுவனும் காதலித்து வந்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சிறுவன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர். பின்னர் சிறுவனை கைது செய்து கோவை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.