தமிழகத்தில் திருச்சி மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி இன்று இரவு முதல்வர் ஸ்டாலின் விமான மூலம் திருச்சி செல்கிறார். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சி வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் முதல்வர் ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கே என் நேரு தகவல் தெரிவித்துள்ளார்.