தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வீராசனூரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி(26) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முரளிக்கு திருமணம் செய்ய பெற்றோர் பெண் தேடி வந்தனர். ஆனால் வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்த முரளிக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை.

இதனால் செல்வம் தனது மகனிடம் வேலைக்கு செல்லுமாறு கூறி கண்டித்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த முரளி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற முரளியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.