கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுவண்டி பாளையம் பி.எஸ். எம் நகரில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீமதி(34) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதமாக ஸ்ரீமதி வேலைக்கு செல்லவில்லை. இந்நிலையில் கனகராஜ் தனது மனைவியிடம் நீ இனிமேல் வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஸ்ரீமதி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஸ்ரீமதியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீமதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.