கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சேரன்மாநகர் ஆசிரியர் காலணியில் இன்ஜினியரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் வெளிநாட்டில் வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இதனை நம்பி அந்த நபர் கேட்ட 6 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணத்தை கிருஷ்ணமூர்த்தி கடந்த 2021-ஆம் ஆண்டு கொடுத்துள்ளார். அதன் பிறகும் அந்த நபர் வேலை வாங்கி தருவதாக கூறி காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பண மோசடி செய்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.