கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூளேஸ்வரன்பட்டி வசந்தம் நகரில் அங்கப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனோரஞ்சிதம்(69) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அங்கப்பன் இறந்து விட்டதால் மனோரஞ்சிதம் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் வாழ்க்கையை வெறுத்த மனோரஞ்சனம் வீட்டில் இருந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோரஞ்சிதம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.