விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வேடம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு சமையலறாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்வேதா ஸ்ரீ(11), யுவஸ்ரீ(8), லோகலட்சுமி(4) என்று மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 30-ஆம் தேதி சித்ரா தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சித்ராவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சித்ராவின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் சித்ரா வேலை பார்க்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியின் போது தகாத வார்த்தைகளால் திட்டி மாணவர் முன்பு அவரை அவமானப்படுத்தியுள்ளார். இதனால் தான் மன உளைச்சலில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாகவும், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.