வேலூர் மாவட்டத்தில் உள்ள துரைபாடி கிராமத்தில் குழந்தைகள் உள்பட 16 பேர் வேனில் ஏற்காடு சுற்றுலா சென்றனர். அந்த வேனை அஜய் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஏற்காட்டில் உள்ள பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்துவிட்டு அவர்கள் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் 6-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்ற போது அஜயின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்துவிட்டது.

இந்த விபத்தில் வேனில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பேருந்தில் ஊருக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற விபத்துக்குள்ளான வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.