சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பெருமாள் தெருவில் கணவரை இழந்த பார்வதி(58) என்பவர் வசித்து வருகிறார். இதற்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் பார்வதியின் இரண்டாவது மகன் அருள்(28) குடிபோதையில் வீட்டிற்கு சென்று தனது தாயிடம் 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

அதற்கு பார்வதி தன்னிடம் பணம் இல்லை என கூறியதால் கோபத்தில் அருள் கத்தியால் தனது தாயின் தலையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் பார்வதியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.