சென்னை மாவட்டத்தில் உள்ள கோவிலம்பாக்கம் பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். நேற்று பிரசாந்த் தனது அண்ணன் கார்த்தியுடன் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். பின்னர் அவர்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் பேருந்து மூலம் கடற்கரை ரயில் நிலையம் வந்து அங்கிருந்து மின்சார ரயிலில் ஏறினார்கள். அந்த ரயில் கோடம்பாக்கம்-மாம்பலம் ரயில் நிலையம் சென்றபோது படிக்கட்டு அருகே நின்ற பிரசாந்த் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்தி அபாய சங்கலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி சக பயணிகள் உதவியுடன் தனது தம்பியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பிரசாந்த் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.