குடும்ப பிரச்சனை காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முதலைப்பட்டிபுதூரில் இளஞ்செழியன் – செல்லம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 22-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த செல்லம்மாள் விஷம் குடித்துள்ளார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்லம்மாள் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து இளஞ்செழியன் கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் செல்லம்மாள் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.