புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வத்தானக்கோட்டையில் இருக்கும் தைல மரக்காட்டு பகுதியில் சாலையோரம் பச்சிளம் பெண் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த குழந்தை ஆடை அணிவிக்கப்பட்டு, துணியின் மீது வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை மீட்டு புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அந்த குழந்தை தற்போது நலமாக உள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சாலையில் குழந்தையை விட்டு சென்றது யார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.