மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பெண்ணின் கணவர் அந்த பெண்ணின் மாதவிடாய் ரத்தத்தை எடுத்து சூனிய பூஜைக்கு கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விஷராந்த் வாடி காவல் நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, கடந்த 2019-ம் ஆண்டு 27 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது. இந்த பெண்ணின் கணவருடைய மைத்துனர் குழந்தை இல்லாத பெண்ணின் மாதவிடாய் இரத்தத்தை கொண்டு வந்தால் ஒருவர் 50 ஆயிரம் ரூபாய் பணம் தருவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து தன்னுடைய மனைவியின் ரத்தத்தை ஒரு பாட்டிலில் பிடித்துக் கொண்டு அந்த நபர் கொடுத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். அந்த மாதவிடாய் இரத்தத்தை பிளாக் மேஜிக் எனப்படும் சூனிய பூஜைக்கு பயன்படுத்தி உள்ளனர். அதன் பிறகு தன்னுடைய மனைவியை அவர் அடித்து பல்வேறு விதமாக துன்புறுத்தி உள்ளார். மேலும் இது தொடர்பாக இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் பெண்ணின் கணவர், மாமியார், மைத்துனர் மற்றும் மருமகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார்.