மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு ஹோலி பண்டிகையை முன்னிட்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. ஜனவரி மாதத்திற்கு பிறகு ஜூன் மாதம் அடுத்ததாக அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும்.

இந்நிலையில் தற்போது அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஊழியர்களுக்கு 38 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் பின 42 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும். மேலும் இந்த அகவிலைப்படி உயர்வினால் 65 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 48 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.