ஈரோடு மாவட்டத்தில் உள்ள தலமலையிலிருந்து திம்பம் செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை அங்கும் இங்கும் நடந்து சென்றது. இந்நிலையில் நெய்தாளபுரத்தில் வசிக்கும் ராமசாமி என்பவர் மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலத்தில் இருந்து நெய்தாளபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் வனச்சாலையில் இருக்கும் வளைவில் திரும்பியுள்ளார். அப்போது அந்த யானை ராமசாமியை துரத்தியதால் மோட்டார் சைக்கிளுடன் அவர் அருகில் இருந்த பள்ளத்தில். விழுந்துவிட்டார்.

உடனடியாக சுதாரித்துக் கொண்டு ராமசாமி அங்கிருந்து எழுந்து ஓடினார். ஆனாலும் யானை அவரை துரத்தி சென்றது. அப்போது அதிர்ஷ்டவசமாக எதிரே ஜீப்பில் வந்த நபர்கள் சத்தம் போட்டு யானையை விரட்டியதால் சிறிது நேரம் கழித்து யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அதிர்ஷ்டவசமாக ராமசாமி உயிர் தப்பினார். இதனை ஜீப்பில் வந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.