ஈரோடு மாவட்டத்திலுள்ள பழைய பாளையம் சுதானந்தன் நகரில் விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 9-ஆம் தேதி முகநூலில் ஒருவர் நாயை கொன்று அதன் புகைப்படத்தை பதிவிட்டார். இதனை பார்த்த பிரேம்குமார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், நாயை கொன்று முகநூலில் புகைப்படத்தை பதிவிட்ட நபர் தேனி மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்(25) என்பது தெரியவந்தது. இவர் ஈங்கூரில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து தலைமறைவாக இருந்த தினேஷை நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.