பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக வந்துள்ளார். தமிழகத்தில் சுமார் 5000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வந்துள்ள நிலையில் நேற்று பகல் 2.45 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். அதன் பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இன்று முதுமலைக்கு சென்றுள்ளார். நேற்று விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமர் மோடியை சந்திக்க தனி தனியே நேரம் கேட்டிருந்த நிலையில், அதற்கு பிரதமர் மோடியும் நேரம் ஒதுக்கியதாக தகவல் வெளியானது. ஆனால் திடீரென பிரதமர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோரை சந்திக்காமல் சென்று விட்டார். அதாவது பாஜக கட்சி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து அதிமுகவில் செயல்படுவதையே விரும்புகிறது. ஆனால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இதை ஏற்க மறுப்பதால் பிரதமர் மோடி அவர்களை சந்திக்க விரும்பவில்லையாம். மேலும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இனி இணைவது சாத்தியம் கிடையாது என்று கூறப்படும் நிலையில் அவர்கள் ஒற்றுமையாக இருப்பதையே பாஜக விரும்புகிறது.