உலகில் அனைவரிடமும் அன்பு காட்டவேண்டும் என போதித்த ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3வது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகை இன்று (ஏப்ரல்-9) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

அந்த வகையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது “உலக மக்கள் நலனுக்காக நற்கருத்தை போதித்த இயேசுவின் அடியொற்றி நடக்கும் கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்துக்கள். அன்பும் சகோதரத்துவமும் ஒற்றுமையும் மேலோங்கும் சமுதாயம் தழைக்க இந்நன்னாளில் உறுதி ஏற்போம்” என அவரது வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.