தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலால் தற்போது தமிழகத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதாவது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 60 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார்.

கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவல் தொற்றை கட்டுப்படுத்த ஒரு சில விதிமுறைகள் அமல்படுத்தப்படும் நிலையில், வரும் நாட்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் கூடிய விரைவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.