தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கீழே இருப்பவர்கள் நாளைக்கு மேடைக்கு வந்து உட்கார்ந்து  பதவியை பெறுவீர்கள். அப்படித்தான் நமது இயக்கத்தை வளர்த்தார்கள் அந்த இருவரும் தலைவர்கள். அவர்களுக்கு செய்கின்ற நன்றி கடன்….  இந்த இயக்கம் தொண்டர்கள் இயக்கம், தொண்டர்களுக்கான இயக்கமாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உருவாக்கினார்.

புரட்சித்தலைவி  மாண்புமிகு  அம்மா அவர்கள்  வழி நடத்தினார்கள். அதனை பெற்று தந்தவர்கள் என்ற பெருமையை நமக்கு இருந்தாலே போதும்.வேறு ஏதும்  தேவையில்லை.அதை போல கழக சட்ட விதியை காப்பாற்றியவர்களும் நாம் தான் என்ற  பெருமையை நாம் அடைய இருக்கிறோம். பின்னால் வருகின்ற நம்முடைய  சந்ததியினர்களுக்கு ஒரு நேரான வழியை நாம் காட்டுவோம். தலைவர் காட்டிய வழி, அம்மா வழி நடத்திய விதி.

புது புது விதியை  எப்படி  புகுத்த முடியும்? அந்த பதவிக்கு வரதுக்கு  வரிசையில் நிக்கிறாங்க. நீங்க என்ன மணியாட்டி வந்தாலும் நடக்காது. அது இன்றைக்கு நடைபெற்ற மதுரை  ஐயோ கண்ட்ராவி.பூராம் மூணு நாளைக்கு முன்னால  போட்ட அந்த புளியோதரை. தட்டுல வாங்குனதும்  பயங்கர வாடை. ஸ்மெல் அடிச்சு இருக்கு. அதை அப்படியே கீழே  கொட்டிட்டு பேட்டி கொடுத்துட்டு போய்ட்டாங்களாம் எல்லாரும்…   நாசமா போவிங்கடா நீங்க என பேசினார்.