இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் பெரும் பரபரப்புடன் இன்றைய நாள்  முடிந்தது. திமுக கூட்டணி கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தனர். அதோடு பாட்டாளி மக்கள் கட்சி ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் உரையை புறக்கணித்தது.

இதனிடையே திமுக கட்சி கூட்டணி கட்சிகள் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தை தொடர்ந்து ஆளுநர் சட்டசபையில் உரையாற்றிய போது அரசு சார்பில் கொடுக்கப்பட்ட குறிப்பை முழுமையாக படிக்காமல் விட்டுவிட்டு,  சில வார்த்தைகளை தவிர்த்து உரையாற்றியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. ஆளுநர் உரை முடிந்த பிறகு பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலினும் ஆளுநரின் செயல் வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்தார்.

ஆளுநர் உரையில் புறக்கணித்த வார்த்தைகள்:

தமிழ்நாடு அமைதி பூங்கா, சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை, மத நல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல், அனைவருக்கும் உள்ளடங்கிய வளர்ச்சி, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி ஆகிய வார்த்தைகளை ஆளுநர் ஆ.என் ரவி ஆளுநர் உரையில் படிக்காமல் புறக்கணித்துள்ளார்.