சென்னையில் மூத்த நிர்வாகிகளுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர்   பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, பண்ருட்டி ராமச்சந்திரன், பாஜகவுடன் தொடர்பில் உள்ளோம். தேர்தல் நேரத்தில் கூட்டணியை முடிவு செய்வோம். வரும் 11ஆம் தேதி மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என  தெரிவித்துள்ளார்.