கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. மேலும் சுட்டெரிக்கும் வெயிலுடன் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக நீர்ச்சத்து நிறைந்த பழங்களை வாங்கி சாப்பிடுகின்றனர். இந்நிலையில் பெண்ணாடம் திருமலை அகரத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார்.

இவரது மகன் ஆக்டர் ராசு(23) உச்சி வெயிலில் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்தபடி சென்றுள்ளார். அப்போது ஒரு வாளியில் இருந்த தண்ணீரை தலையில் ஊற்றி குளித்தபடி பெண்ணாடம் பேருந்து நிலையம், திட்டக்குடி சாலை, விருதாச்சலம் சாலையில் பயணம் செய்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.