விழுப்புரம் மாவட்டத்தில் 32 அடி கொள்ளளவு உடைய வீடூர் அணை இருக்கிறது. தற்போது 43 கோடி மதிப்பில் அணையில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் அணையின் கரையில் 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4.5 கிலோமீட்டர் தூரம் தார் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் அத்திகுப்பத்தை சேர்ந்த சிலர் அணைக்கு சென்று பார்த்தனர். அப்போது தார் சாலை தரமற்றதாக போடப்பட்டிருப்பதை பார்த்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து வீடூர் அணையின் உதவி செயற்பொறியாளர் ரமேஷ் கூறியதாவது, பணி ஆணையின் படி 4.5 கிலோமீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தார் சாலை இறுகும் தன்மையை அடையும் முன்பே வேண்டுமென்றே சிலர் உள்நோக்கத்துடன் சாலையை பெயர்த்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். மேலும் அணையின் பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்தும் படி தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.