ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காட்டில் இருந்து தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆரணி நோக்கி சென்று கொண்டிருந்தது. இதேபோல் ஆரணியிலிருந்து ஆற்காடு நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தாஜ்புரா கூட்ரோடு அருகே சென்றபோது பேருந்தும், லாரியும் மோதி கொண்டது.

இந்த விபத்தில் இரண்டு வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.